Search This Blog

Tuesday, December 18, 2018

நடராஜா

நடராஜா
6) யானை வாகனம்

ஆட்டத்தில்
போட்டியிட்டு
அம்பலத்தில்
ஆடினான்

ஒரு காலை
மேல் தூக்கி
உமையவளை
ஒடுக்கினான்

எல்லையிலே
காவல் காக்கும்
காளியாய்
கிடத்தினான்

வருடத்திற்கு
இரு முறையே
வீதி வலமும்
வருவான்

தேர் மீது
பவனி வந்து
குறை யாவும்
கேட்பான்

பட்டம் கட்டிய
ராஜனைப் போல்
பஞ்சமூர்த்திகளுடன்
வருவான்

ஆயிரங்கால்
மண்டபத்தில்
நடனம் போட்டு
செல்வான்

உலகெலாம்
என்றுரைத்து
பெரிய புராணம்
தந்தான்

உமாபதி சிவம்
மூலம் நமக்கு
கொடிக்கவியும்
கொடுத்தான்.

ராஜாதி ராஜன்
அவன் நடராஜனாம்
சிவலிங்க ரூபத்து
சிவ ராஜனாம்

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இன்று தில்லையிலே
யானை வாகனத்தில்
சிவானந்த நாயகி ஸமேத
ஸ்ரீ சோமாஸ்கந்தர் வீதியுலா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.12.2018

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...