வாய்க்கு ருசியாக அரு
சுவையான உணவுண்டு
நா சிவக்க வெற்றிலை
பாக்கோடு சுண்ணாம்பு
இளைப்பாற இதமாய்
இலவம் பஞ்சு கட்டிலில்
ராஜாவின் பாடல்களை
ரம்மியமாய்க் கேட்டபடி
தூங்கியும் தூங்காமலும்
சோம்பலுடன் கிடக்கையில்
எடுத்த பிறப்புக்கு ஒரு
அர்த்தம் விளங்குதப்பா.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.01.2018
No comments:
Post a Comment