Search This Blog

Wednesday, January 16, 2019

காணும் பொங்கல்

காணும் பொங்கல்

உறவினரோடு
ஒன்றாய்க் கூடி
உற்சாகமாய்
மகிழலாம்.

வகை வகையாய்
உணவு சமைத்து
உட்கார்ந்து புசித்து
மகிழலாம்.

சமூக அக்கரையில்
சமத்துவ பொங்கல்
படையலும் இட்டு
மகிழலாம்.

ஆற்றுப் படுகை
கடற்கரை என்று
கூட்டமாய்க் கூடி
மகிழலாம்.

சொந்தங்களோடு
சுற்றுலா சென்று
சந்தோஷித்து
மகிழலாம்.

அலுப்பும் தீர மன
அழுத்தமும் தீர்ந்திட
அனைவரோடு பேசி
மகிழலாம்.

காணும் பொங்கல் இது
வேணும் பொங்கல் இங்கு
அனைவரையும் குஷியாக
காட்டும் பொங்கல்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...