Search This Blog

Thursday, January 17, 2019

தை வெள்ளிக் கிழமை

தை வெள்ளிக் கிழமை

தை வெள்ளிக் கிழமையிலே
அம்பிகையை சரணடைந்து
வேண்டும் வரம் பெற்றிடவே
விளக்கேற்றி வழிபடுவோம்.

ஆடி தை மாத வெள்ளிகள்
அம்மனுக்கு உகந்தவையாம்
ஆசாரமாய் தொழுதிட அவள்
அனுக்கிரஹமும் புரிபவளாம்,

சுமங்கலிகள் பூஜை செய்ய
சௌபாக்கியம் தந்திடுவாள்
கன்னியர்கள் வழிபடவே நற்
கணவனையும் அருளிடுவாள்.

வேப்பிலையில் வீற்றிருக்கும்
மாரியம்மனைத் தொழுவோம்
கூட்டமாக கரகமெடுத்து கூழ்
படைத்து மகிழ்வோம்.

மாவிலைத் தோரணம் கட்டி
மாவிளக்கு மாவும் வைத்து
மனமுருகிப் பிரார்த்திக்கவே
மங்களமான வாழ்வளிப்பாள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
18.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...