தை வெள்ளிக் கிழமை
தை வெள்ளிக் கிழமையிலே
அம்பிகையை சரணடைந்து
வேண்டும் வரம் பெற்றிடவே
விளக்கேற்றி வழிபடுவோம்.
ஆடி தை மாத வெள்ளிகள்
அம்மனுக்கு உகந்தவையாம்
ஆசாரமாய் தொழுதிட அவள்
அனுக்கிரஹமும் புரிபவளாம்,
சுமங்கலிகள் பூஜை செய்ய
சௌபாக்கியம் தந்திடுவாள்
கன்னியர்கள் வழிபடவே நற்
கணவனையும் அருளிடுவாள்.
வேப்பிலையில் வீற்றிருக்கும்
மாரியம்மனைத் தொழுவோம்
கூட்டமாக கரகமெடுத்து கூழ்
படைத்து மகிழ்வோம்.
மாவிலைத் தோரணம் கட்டி
மாவிளக்கு மாவும் வைத்து
மனமுருகிப் பிரார்த்திக்கவே
மங்களமான வாழ்வளிப்பாள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
18.01.2019
No comments:
Post a Comment