இன்று பிரதோஷம் 🙏🙏
ஐயனே !
அலங்காரம் இல்லாதவன் நீ
ஆபரணம் அணியாதவன் நீ
இமயத்தில் வீற்றிருப்பவன் நீ
ஈரேழு லோகத்தின் அதிபதி நீ
உமையாளுடன் இருப்பவன் நீ
ஊர்த்துவ தாண்டவத்தான் நீ
எமனை எட்டித் தள்ளியவன் நீ
ஏற்றமிகு வாழ்வு அளிப்பவன் நீ
ஐந்தெழுத்தில் அருள்பவன் நீ
ஒன்று பலவாக நிறைந்தவன் நீ
ஓங்காரத்தின் உட்பொருளும் நீ
ஒளஷதமாய் ரக்ஷிப்பவன் நீ
ஆனந்த தாண்டவமே !
நின் தூக்கிய திருவடியை
சற்றே மாற்றிக் கொள்வாய்
என் சிரசின் மீது உன் பாதத்தை
சற்றே இருத்திக் கொள்வாய்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்.
அன்பன், சிதம்பரம் ஆர். வீ பாலா
18.01.2019
No comments:
Post a Comment