Search This Blog

Friday, January 18, 2019

ஈசனே சிவகாமி நேசனே

இன்று பிரதோஷம் 🙏🙏

ஐயனே !

அலங்காரம் இல்லாதவன் நீ
ஆபரணம் அணியாதவன் நீ
இமயத்தில் வீற்றிருப்பவன் நீ
ஈரேழு லோகத்தின் அதிபதி நீ

உமையாளுடன் இருப்பவன் நீ
ஊர்த்துவ தாண்டவத்தான் நீ
எமனை எட்டித் தள்ளியவன் நீ
ஏற்றமிகு வாழ்வு அளிப்பவன் நீ

ஐந்தெழுத்தில் அருள்பவன் நீ
ஒன்று பலவாக நிறைந்தவன் நீ
ஓங்காரத்தின் உட்பொருளும் நீ
ஒளஷதமாய் ரக்ஷிப்பவன் நீ

ஆனந்த தாண்டவமே !

நின் தூக்கிய திருவடியை
சற்றே மாற்றிக் கொள்வாய்
என் சிரசின் மீது உன் பாதத்தை
சற்றே இருத்திக் கொள்வாய்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்.

அன்பன், சிதம்பரம் ஆர். வீ பாலா
18.01.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...