இறவா இரவு
இரவு மட்டும்
இல்லாதிருந்தால்
இவ்வுலகம் என்றோ
இல்லாது போயிருக்கும்.
அக்கிரமம் செய்யும்
அயோக்கியரும் கூட
ஆழ்ந்து உறங்கிடவே
ஓர் இரவு தேவை.
அலுவலகத்தின்
அலுப்பை மறந்து
அசதியாய் துயில
ஓர் இரவு தேவை.
பகலில் உழைத்து
ஓடாய்த் தேய்ந்து
ஒய்யாரமாய் ஓய
ஓர் இரவு தேவை.
வெயிலில் வதங்கி
வாடும் வேளையில்
சுகமாய் சாய்ந்திட
ஓர் இரவு தேவை.
ஊடலுக்குப் பின்
உறவும் நிலைக்க
கூடலைத் தூண்டும்
ஓர் இரவு தேவை.
புதுமண தம்பதியர்
புரிதல் நிலைத்திட
காரிருள் சூழ்ந்த
ஓர் இரவு தேவை.
இரவு மட்டும்
இல்லாதிருந்தால்
இவ்வுலகம் என்றோ
இல்லாது போயிருக்கும்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.01.2019
No comments:
Post a Comment