கடவுளே
பெண்ணை ஏன் படைத்தாய் ?
கண்ணை ஏன் கொடுத்தாய் ?
காணும் இடங்களெல்லாம்
கவர்ச்சிமிகு கன்னியர்கள்
கருப்பும் சிகப்பும் கலந்து
காந்தமாய் ஈர்ப்பவர்கள்.
சூரியனின் ஈர்ப்பினிலே
கோள்கள் சுற்றி வரும்
சுந்தரிகள் ஈர்ப்பினிலே
காளையர்கள் சுற்றிடுவர்.
தாவணியைக் கடந்தாலே
தடுமாறிப் போகின்றோம்
சேலையைப் பார்த்தாலே
சொக்கியே போகின்றோம்.
படுக்கையிலே புரண்டபடி
பகல் கனவு காணுகிறோம்
சோம்பலையும் முறித்தபடி
சொப்பனத்தில் மிதக்கிறோம்
வயது வித்தியாசமின்றி
வாலிபர்கள் நோக்கிடவே
பட்டாம்பூச்சி கணக்காக
பளிச்சென்று திரிகின்றீர்.
உடைக் குறைப்பு செய்து
உள்ளத்தை கவர்கின்றீர்
பிஞ்சு மனதையும் கூட
பாடாய்ப் படுத்துகின்றீர்.
வழி மாற்றி சென்றாலும்
விழி முன்னர் வருகின்றீர்
பழி எம்மேல் போட்டுவிட்டு
முழி பிதுங்க செல்கின்றீர்.
ஆணுக்கு நிகர் என்று
அனைத்திலும் நீற்கின்றீர்
தேகத்தை தா(ராள)மாய்
திறந்தும் வைக்கின்றீர்.
இனிப்பைத் தேடி வரும்
எறும்புக் கூட்டம் போல
வனப்பை நாடி என்றும்
அரும்புக் கூட்டம் சேரும்.
மான் கூட்டத்தை தேடும்
மன்மத சிங்கங்களுடனே
மல்லுக்கு வம்பிடாமல்
மெளனியாய் நகருங்கள்.
கடவுளே
பெண்ணை ஏன் படைத்தாய் ?
கண்ணை ஏன் கொடுத்தாய் ?
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.01.2019
No comments:
Post a Comment