நடராஜா
கருவாக உருவெடுத்து
காசினியில் வந்தோம்.
குருவாக நல்லோரை
அடிபணிந்து இருப்போம்.
திருவோடு ஏந்தாமல்
கை நிறைய சேர்ப்போம்.
தெருவோடு செல்கையிலே
கொண்டேதும் போவோம்.
தருவாக வாழும் போது
மற்றவர்க்கு அளிப்போம்.
எருவாக அந்திமத்தில்
காட்டிற்கு போவோம்.
உருவாக என்னை நீயும்
ஆட்கொள்ள வேணும்.
திருச்சிற்றம்பலத்துறையும்
தில்லை நடராஜா.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.01.2019
No comments:
Post a Comment