Search This Blog

Monday, January 7, 2019

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு

சாதிவாரியாக இங்கே
இட ஒதுக்கீடும் உண்டு
சாதிகள் இல்லையென
சமத்துவக் கூற்றுமுண்டு.

வர்ணாஸ்ரம தர்மத்திற்கு
வக்காளத்து வாங்குவோர்
ஐம்பது ஆண்டுகளாகியும்
ஒதுக்கீட்டை மறுப்பதில்லை,

ஓட்டு வங்கிக்கு
ஆதாரமாக இங்கு
அரசியல் கட்சிகள்
சாதியைப் பார்க்கும்.

மெத்தக் கொழுத்த
மிராசுதாரரும் கூட
சாதியின் போர்வையில்
சலுகைகள் பெறுவர்.

பிறப்பால் முற்படுத்தப்பட்ட
வகுப்பாயின் ஒருவர்க்கு
பணம் காசு இல்லையெனில்
பிற்படுத்தப்பட்ட நிலையே.

ஏற்றத்தாழ்வைக்
களைவது யாரு ?
சமூக நீதியினைக்
காப்பவர் யாரு ?

நச்சென்ற அறிவிப்பை
வெளியிட்டார் நரேந்திரர்
முற்படுத்தப்பட்டவர்க்கும்
பத்து சதவிகிதம் என்றார்.

தாமதமாக கிட்டிய நல்ல
தீர்ப்பு என்பதால் இதை
எதிர்த்து கோஷமிட இங்கு
எவர்க்கும் துணிவில்லை,

இனி வெளிநாடு சென்று
வேலை தேடாமல் நமது
உள்நாட்டிலேயே இட
ஒதுக்கீட்டில் பணி புரிவர்.

அரசு உத்யோகத்தில் இனி
ஆக்கப்பூர்வ போட்டி எழும்
படித்த இளைஞர்க்கு நல்ல
பதவி உயர்வும் வரும்.

வாழ்க வளர்க ! ஜெய் ஹிந்த் !
🌷🌷🌹🌹🌺🌺🌻🌻

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08-01 2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...