Search This Blog

Friday, February 1, 2019

தில்லைக்கு வாருங்கள்

தில்லைக்கு வாருங்கள்

ஆடிய பாதத்துடன்
ஆகாச வெளியினில்
ஆடும் கூத்தினைக் காண
தில்லைக்கு வாருங்கள்.

அருவமாய் இருப்பவன்
உருவம் எடுத்த பின்னே
நின்றாடுவதைக் காண
தில்லைக்கு வாருங்கள்.

எங்கும் நிறைந்த பொருள்
ஏகாந்தமாய் அம்மையுடன்
ஆடும் தாண்டவம் காண
தில்லைக்கு வாருங்கள்.

தடுத்தாட் கொண்டருளும்
தயாபர மூர்த்தியை அவனது
தூக்கிய திருவடியுடன் காண
தில்லைக்கு வாருங்கள்.

கயிலாய மலை ஈசனை
கனகசபைதனிலெழுந்து
குஞ்சிதபாதத்துடன் காண
தில்லைக்கு வாருங்கள்.

நீராடி நீறணிந்து
நமச் சிவாயம் நவின்று
தாண்டவத்தைக் காண
தில்லைக்கு வாருங்கள்.

அப்பருக்கு அருளிய
ஆனந்த கூத்தனின்
அம்பலத்தைக் காண
தில்லைக்கு வாருங்கள்.

நடராஜா நடராஜா நடராஜா

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
10.02.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...