தனிப் பயணம்
பந்தத்தை பையன் பிடிக்க
பந்தமெல்லாம் வீதி நிற்க
பாடையிலே நால்வரோடு
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.
பட்டு சட்டை போட்டவரும்
பணமிகுதி கொண்டவரும்
மூச்சடங்கிப் போன பின்னே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.
படித்த பெருமேதாவிகள்
பாமர ஜனங்களும் கூட
பிணமான பின்னாலே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.
வஞ்சியர்கள் புடைசூழ
வாசனை திரவியத்தில்
வகையாக மூழ்கியோரும்
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.
சாதி மத பேதங்களின்றி
சமத்துவமாய் எல்லோரும்
ஒற்றை வழிப் பாதையிலே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.
கொண்டு வந்தது யாதடா
மொண்டு செல்வது ஏதடா
மாண்டு போகும் மானிடா நீ
உண்டு உறங்கி கிடக்காமல்
தொண்டு செய்து கழிப்பதை
கண்டு கொண்டு வாழடா.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
03.02.2019
No comments:
Post a Comment