Search This Blog

Saturday, February 2, 2019

தனிப் பயணம்

தனிப் பயணம்

பந்தத்தை பையன் பிடிக்க
பந்தமெல்லாம் வீதி நிற்க
பாடையிலே நால்வரோடு
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

பட்டு சட்டை போட்டவரும்
பணமிகுதி கொண்டவரும்
மூச்சடங்கிப் போன பின்னே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

படித்த பெருமேதாவிகள்
பாமர ஜனங்களும் கூட
பிணமான பின்னாலே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

வஞ்சியர்கள் புடைசூழ
வாசனை திரவியத்தில்
வகையாக மூழ்கியோரும்
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

சாதி மத பேதங்களின்றி
சமத்துவமாய் எல்லோரும்
ஒற்றை வழிப் பாதையிலே
போகும் பயணம் இதுவே
பட்டினத்தடிகள் உரைத்த
தனிப் பயணம்.

கொண்டு வந்தது யாதடா
மொண்டு செல்வது ஏதடா
மாண்டு போகும் மானிடா நீ
உண்டு உறங்கி கிடக்காமல்
தொண்டு செய்து கழிப்பதை
கண்டு கொண்டு வாழடா.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
03.02.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...