கண்மணியே
ஏறெடுத்து என்னை நீ
பார்க்கவும் வேண்டாம்
செல்லெடுத்து செல்லமாய்
கொஞ்சவும் வேண்டாம்.
இறுக்கமாய் உன் மனதை
வைத்திருக்க வேண்டாம்
உருக்கமாய் நாலு வார்த்தை
பேசவும் வேண்டாம்.
இடுகின்ற பதிவிற்கு
பதில் போட வேண்டாம்
சுடுகின்ற சொல்லால்
சுட்டெறிக்க வேண்டாம்.
ஆன்லைனில் இருந்து நீ
விலகிச் செல்ல வேண்டாம்
உன் பெயர் பார்த்து கனவுறும்
கற்பனை கலைக்க வேண்டாம்.
ஆயுசுக்கும் ஆன்ட்ராய்டில்
அடைபட்டு கிடப்பேன், நான்
அலைபேசி அணையாமல்
அதை உயிரூட்டி மகிழ்வேன்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.02.2019
No comments:
Post a Comment