Search This Blog

Sunday, February 3, 2019

கண்மணியே

கண்மணியே

ஏறெடுத்து என்னை நீ
பார்க்கவும் வேண்டாம்
செல்லெடுத்து செல்லமாய்
கொஞ்சவும் வேண்டாம்.

இறுக்கமாய் உன் மனதை
வைத்திருக்க வேண்டாம்
உருக்கமாய் நாலு வார்த்தை
பேசவும் வேண்டாம்.

இடுகின்ற பதிவிற்கு
பதில் போட வேண்டாம்
சுடுகின்ற சொல்லால்
சுட்டெறிக்க வேண்டாம்.

ஆன்லைனில் இருந்து நீ
விலகிச் செல்ல வேண்டாம்
உன் பெயர் பார்த்து கனவுறும்
கற்பனை கலைக்க வேண்டாம்.

ஆயுசுக்கும் ஆன்ட்ராய்டில்
அடைபட்டு கிடப்பேன், நான்
அலைபேசி அணையாமல்
அதை உயிரூட்டி மகிழ்வேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.02.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...