Search This Blog

Thursday, February 7, 2019

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம்
குறைய சிலர் மது
அருந்துவதுண்டு

மரத்துப் போயி
நாள் முழுக்க புழுங்கி
சாவதுண்டு

உறக்கமில்லா
இரவோடு புரண்டு
படுப்பதுண்டு

உற்சாகத்தையும்
தொலைத்து விட்டு
ஓடி ஒளிவதுண்டு

வெறித்ததோர்
பார்வையோடு விலகிச்
செல்வதுண்டு

விதி வசத்தால்
வழி தவறிப் போய்
விரக்தியடைவதுண்டு

உறவுகளோடு
இணையாது ஒதுங்கிப்
போவதுண்டு

ஊர் முழுக்க
எதிரியாக நினைத்துக்
கொள்வதுண்டு

தனிமைத் தேடி
ஒதுங்கிச் சென்று
மறைந்து கொள்வதுண்டு

தப்பு தப்பா
மனஸுக்குளே
குழம்பிப் போவதுண்டு

நடப்பதெல்லாம்
நன்மைக்கென்று
நம்பப் பழகனும்

நொடிஞ்ச பொழுது
நண்பர்களோட
நட்பு பழகனும்

இதுவும் கடந்து
போகுமென மனதில்
இருத்தனும்

இறைவனது
ஆட்டமென நாமும்
நினைக்கனும்

ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.02.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...