மன அழுத்தம்
மன அழுத்தம்
குறைய சிலர் மது
அருந்துவதுண்டு
மரத்துப் போயி
நாள் முழுக்க புழுங்கி
சாவதுண்டு
உறக்கமில்லா
இரவோடு புரண்டு
படுப்பதுண்டு
உற்சாகத்தையும்
தொலைத்து விட்டு
ஓடி ஒளிவதுண்டு
வெறித்ததோர்
பார்வையோடு விலகிச்
செல்வதுண்டு
விதி வசத்தால்
வழி தவறிப் போய்
விரக்தியடைவதுண்டு
உறவுகளோடு
இணையாது ஒதுங்கிப்
போவதுண்டு
ஊர் முழுக்க
எதிரியாக நினைத்துக்
கொள்வதுண்டு
தனிமைத் தேடி
ஒதுங்கிச் சென்று
மறைந்து கொள்வதுண்டு
தப்பு தப்பா
மனஸுக்குளே
குழம்பிப் போவதுண்டு
நடப்பதெல்லாம்
நன்மைக்கென்று
நம்பப் பழகனும்
நொடிஞ்ச பொழுது
நண்பர்களோட
நட்பு பழகனும்
இதுவும் கடந்து
போகுமென மனதில்
இருத்தனும்
இறைவனது
ஆட்டமென நாமும்
நினைக்கனும்
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
07.02.2019
No comments:
Post a Comment