சிறு சிந்தனைகள்
அளவான பணமும்
அன்பான மனமும்
அமைதியான குணமும்
ஆயுள் காக்கும் மருந்தாம்.
உள்ளே போகும் எதுவும்
வெளியில் வந்தே தீரும்
உள்ளேயே தங்கி விட்டால்
வியாதியும் வந்தே தீரும்.
நாவின் ருசிக்கு மயங்கி
நறுமண உணவாய் உண்டு
காலத்தைக் கடத்தி வந்தால்
காலனும் கிட்டே வருவான்.
பசித்த பின்னே புசியென
பாட்டி சொன்னாள் அன்று
பண்டத்தை பலமாய் தின்று
பரிதவித்திருப்போர் இன்று.
ரசனை மிகுந்த வாழ்வு
இறைவன் அளித்த பரிசு
ரசிக்க நிறுத்தி விட்டால்
இவ்வுலகம் ஆகும் தரிசு.
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.02.2019
No comments:
Post a Comment