Search This Blog

Friday, March 1, 2019

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!

பாகம் பிரித்து தந்தும்
போதாதா உனக்கு

பக்கத்தில் இருந்தபடி
பிரச்சினைகள் தருகிறாய்

வேரோடு களைத்தெறிய
வெகு நேரம் ஆகாது

இரவோடு இரவாக
இருந்த இடம் மறையும்

அமைதியை விரும்பி
அடக்கமாயிருக்கிறோம்

அன்றைய பாரதப் போரில்
கவுரவர்கள் அழிந்தனர்

இன்றைய பாரதப் போரில்
கயவர்கள் பலர் அழிவர்

இத்தனை வருடங்களில்
எத்தனை உயிரிழப்பு

தீவிரவாதத்தை
கையில் எடுத்தவனே

தீயீற்குள் நீ மீண்டும்
கை வைத்திருக்கிறாய்

ஒரு நாள் உன்னையும் சுடும்
உன் மக்களையும் பொசுக்கும்

உலகின் பக்கத்தில் இருந்து
நீ துண்டிக்கப்படுவாய்

நீருக்கும் சோற்றுக்கும்
திண்டாடி மடிவாய்

வர்த்தகம் நிறுத்தப்பட்டு
வஞ்சிக்கப்படுவாய்

வளைகுடா நாட்டிலும் கூட
புறக்கணிக்கப்படுவாய்

மதத்தின் பெயரால்
மாநிலம் நடத்துபவனே

கண்மூடித்தனமாக
பின்பற்றுவதை நிறுத்து

சமாதான மார்க்கத்தில்
உன் நிலையை இருத்து

இன்று போய் நாளை வாவென
இராமன் கூறய தேசம் இது

கேளாத இராவணன் கதை
முடித்து வைத்த நாடும் இது

பிழைத்துப் போக மேலும்
வாய்ப்பொன்று தருகிறோம்

பாரதத்தை சீண்ட வேணாம்
எச்சரிக்கை தருகிறோம்.

ஜெய் ஹிந்த் !! வந்தே மாதரம் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...