சித்தப்பா
அண்ணாந்து
வியக்க வைக்கும்
ஆறடி உயரம்
ஆஜானுபாகு
உடற்கட்டு
தேகம்
ஆனந்த
தாண்டவத்தை
பணிந்தவர்
அழகு
முருகனை நிதம்
தொழுபவர்
வேதத்தை
ரக்ஷிக்க தம்
வாரிசுகளை
பாடசாலை
சேர்ப்பித்த
மாமனிதர்
சித்தப்பா
என்றாலே
சேலத்து
மாம்பழங்கள்
சிறு வயதிற்கு
இட்டுச் செல்லும்
பாரத தேசத்தை
பன்முறை
வலம் வந்து
புண்ணியம்
சேர்த்திட்ட
பாக்கியசாலி
சோதனைகள்
பல கண்டும்
சோர்ந்திடாமல்
ஜெயித்து
வெளிவந்த
பராக்கிரமசாலி
வாழ்வின்
போராட்டத்தை
வெற்றி கொள்ள
இவர் வாழ்க்கையை
படித்தால் நாமும்
கற்றுக் கொள்ளலாம்
எண்பது
என்பது இவர்
தேகத்திற்கு
நாற்பது
என்பது இவர்
வேகத்திற்கு
சதாபிஷேகம் காணும்
சித்தப்பா அவர்கள்
ஸ்ரீமத் ஜடா விநாயகர்
கிருபையாலும் ஆனந்த
நடராஜ மூர்த்தி அருளாலும்
நூற்றாண்டு பல கண்டு
நலமுடன் எங்களையெல்லாம்
ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்
தங்கள் பதம் பணிந்த
மகன் பாலு 🙏🙏🙏🙏
No comments:
Post a Comment