Search This Blog

Sunday, March 10, 2019

சித்தப்பா

சித்தப்பா

அண்ணாந்து
வியக்க வைக்கும்
ஆறடி உயரம்
ஆஜானுபாகு
உடற்கட்டு
தேகம்

ஆனந்த
தாண்டவத்தை
பணிந்தவர்
அழகு
முருகனை நிதம்
தொழுபவர்

வேதத்தை
ரக்ஷிக்க தம்
வாரிசுகளை
பாடசாலை
சேர்ப்பித்த
மாமனிதர்

சித்தப்பா
என்றாலே
சேலத்து
மாம்பழங்கள்
சிறு வயதிற்கு
இட்டுச் செல்லும்

பாரத தேசத்தை
பன்முறை
வலம் வந்து
புண்ணியம்
சேர்த்திட்ட
பாக்கியசாலி

சோதனைகள்
பல கண்டும்
சோர்ந்திடாமல்
ஜெயித்து
வெளிவந்த
பராக்கிரமசாலி

வாழ்வின்
போராட்டத்தை
வெற்றி கொள்ள
இவர் வாழ்க்கையை
படித்தால் நாமும்
கற்றுக் கொள்ளலாம்

எண்பது
என்பது இவர்
தேகத்திற்கு
நாற்பது
என்பது இவர்
வேகத்திற்கு

சதாபிஷேகம் காணும்
சித்தப்பா அவர்கள்
ஸ்ரீமத் ஜடா விநாயகர்
கிருபையாலும் ஆனந்த
நடராஜ மூர்த்தி அருளாலும்
நூற்றாண்டு பல கண்டு
நலமுடன் எங்களையெல்லாம்
ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்
தங்கள் பதம் பணிந்த
மகன் பாலு 🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...