பெண்ணே !!!
தாயாக
தாரமாக
தங்கையாக
தமக்கையாக
தோழியாகவும்
வலம் வரும்
தேவதை நீ !!!!
ஆண் என்னும்
வல்லினத்தை
அனுசரித்து போகும்
மெல்லினம் நீ.
கல்விக்கு சரஸ்வதி
செல்வத்துக்கு இலக்குமி
வீரத்திற்கு அம்பிகையென
பெண்ணை போற்றுகிறோம்.
பெண்ணில்லாத வீடு
பாழடைந்த பங்களா
ஒழுங்கு பெறாத ஒரு
ஓவியம் போன்றது.
வீட்டிலும் சரி
ரோட்டிலும் சரி
பாதுகாப்பு இன்னும்
கேள்விக்குறியே.
சுயமாக முடிவெடுத்து
சுதந்திரமாய் செயல்படும்
சந்தோஷமான வாழ்க்கை
அடைப்புக்குறியே.
போர் வீரர்களின் தியாகம்
நாட்டைக் காக்கின்றது நம்
பெண்மணிகளின் தியாகம்
வீட்டைக் காக்கின்றது.
கோபத்தை வெளிக்காட்டாது
உள்ளுக்குள்ளேயே புழுங்கும்
இல்லத்தரசிகள் நிறைந்த
இந்திய தேசம் இது.
பல்லைக் கடித்தபடி
பாத்திரங்களை உருட்டும்
பத்தினிகள் நிறைந்த
பாரத தேசம் இது.
அடக்கி ஆள நினைக்கும்
ஒவ்வொரு ஆண்மகனும்
அடுத்த பிறப்பில் நிச்சயம்
பெண்ணாகப் பிறக்கனும்
அம்மணிகள் படும் துயரை
அனுபவித்து பார்க்கனும்.
பெண்களைப் போற்றுவோம் !!
மகளிர் தின வாழ்த்துக்களுடன்
🙏🙏🌷🌷🌹🌹🌺🌺🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.03.2019
No comments:
Post a Comment