Search This Blog

Tuesday, March 12, 2019

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம்

அடித்து நொறுக்க
வேண்டும் அந்த
அயோக்கியர்களை

வழக்கு விசாரணை
மேல் முறையீடு என
இழுத்தடிக்க முயல்வர்

அரசியல் தலையீடுகளும்
அதிகார துஷ்பிரயோகமென
திசை திருப்ப நினைப்பர்

குறுக்கு விசாரணையில்
கன்னியர்களை நிறுத்தி
கேள்வியால் துளைப்பர்

வன்புணர நினைக்கும்
வக்கிர புத்திக்காரர்களை
தேடிப் பிடிக்க வேணும்

வளைகுடா நாடு போல
கடுமையாக தண்டிக்க
சட்டம் இயற்ற வேணும்

பூவைக் கசக்க நினைக்கும்
பொறுக்கிகளைப் பிடித்து
தூக்கிலே ஏற்ற வேணும்

வேதனையுடன்,

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...