பொள்ளாச்சி சம்பவம்
அடித்து நொறுக்க
வேண்டும் அந்த
அயோக்கியர்களை
வழக்கு விசாரணை
மேல் முறையீடு என
இழுத்தடிக்க முயல்வர்
அரசியல் தலையீடுகளும்
அதிகார துஷ்பிரயோகமென
திசை திருப்ப நினைப்பர்
குறுக்கு விசாரணையில்
கன்னியர்களை நிறுத்தி
கேள்வியால் துளைப்பர்
வன்புணர நினைக்கும்
வக்கிர புத்திக்காரர்களை
தேடிப் பிடிக்க வேணும்
வளைகுடா நாடு போல
கடுமையாக தண்டிக்க
சட்டம் இயற்ற வேணும்
பூவைக் கசக்க நினைக்கும்
பொறுக்கிகளைப் பிடித்து
தூக்கிலே ஏற்ற வேணும்
வேதனையுடன்,
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.03.2019
No comments:
Post a Comment