Search This Blog

Friday, March 15, 2019

பெண்ணே

பெண்ணே

எரியும் விளக்கிலே விழும்
விட்டில் பூச்சியாக உனை
நீயே மாய்த்துக் கொள்வது
ஏனம்மா

வெளியிலே வெளிச்சம் காட்டி
உள்ளுக்குள் இருண்டிருக்கும்
காமுகர்கள் பலரும் நிறைந்த
நாடம்மா

சமூக வலைதளங்களில்
சிக்கி சின்னாபின்னமாகும்
கன்னியர்கள் நிலையை சற்று
பாரம்மா

சுதந்திரம் எனும் பெயரில்
சொல் பேச்சைக் கேளாமல்
சுற்றித் திரியும் பெண்களின்
கதியம்மா

தைரியமாக இரு திமிர் வேண்டாம்
துணிவாக இரு தடுமாற வேண்டாம்
தெளிவாக இரு குழப்பம் வேண்டாம்
பெற்றோருடன் இரு அவசரம் வேண்டாம்

இனிய காலை வணக்கம் 🌹🌺🌻🌷

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15-03-2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...