பெண்ணே
எரியும் விளக்கிலே விழும்
விட்டில் பூச்சியாக உனை
நீயே மாய்த்துக் கொள்வது
ஏனம்மா
வெளியிலே வெளிச்சம் காட்டி
உள்ளுக்குள் இருண்டிருக்கும்
காமுகர்கள் பலரும் நிறைந்த
நாடம்மா
சமூக வலைதளங்களில்
சிக்கி சின்னாபின்னமாகும்
கன்னியர்கள் நிலையை சற்று
பாரம்மா
சுதந்திரம் எனும் பெயரில்
சொல் பேச்சைக் கேளாமல்
சுற்றித் திரியும் பெண்களின்
கதியம்மா
தைரியமாக இரு திமிர் வேண்டாம்
துணிவாக இரு தடுமாற வேண்டாம்
தெளிவாக இரு குழப்பம் வேண்டாம்
பெற்றோருடன் இரு அவசரம் வேண்டாம்
இனிய காலை வணக்கம் 🌹🌺🌻🌷
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15-03-2019
No comments:
Post a Comment