கோடீஸ்வரன்
அதிர்ந்து பேசாமல்
அடக்கமாய் இருத்தல்
கூந்தலில் தைலமிட்டு
பின்னலிட்டு முடித்தல்
வாய்க்கு நல் ருசியாக
அருசுவை தயாரித்தல்
உதிரிப் பூக்களெடுத்து
மாலையாய் தொடுத்தல்
தரையினில் நீர் தெளித்து
புள்ளி வைத்த கோலமிடல்
மங்களகரமாய் இல்லத்துள்
விளக்கேற்றி வழிபடுபவளை
வீட்டினில் இருக்கப் பெற்றவன்
கோடீஸ்வரனாவான்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.03.2019
No comments:
Post a Comment