Search This Blog

Sunday, March 3, 2019

பிரதோஷம்

உமாபதியே

உலகம் உய்யவே
விடமுண்டவன் நீ
வானவர் வாழவே
திடம் பூண்டவன்.

ஆலகாலத்தை
தொண்டையுள்
நிறுத்தினாய்
தேவர்களுக்கு
அமுதம் தந்து
அருளினாய்.

தண்டை
சலங்கையுடன்
ஆடிடுவாய்
கங்கையை
தலை மேலே
இருத்திடுவாய்

இந்த மாலை
வேளையில்
மஹேஸ்வரா நீ
மா நிலம்
தழைக்கவே
நடனமிடுவாய்

பிரதோஷ
காலம் உனை
பூஜிக்கவே
பக்தர்களின்
குறையினை
தீர்த்திடுவாய்.

பார்வதி
நாயகா
பரமேஸ்வரா
இப் பாலனுக்கு
அனுக்கிரகம்
தரும் ஈஸ்வரா.

பிரதோஷ கால வணக்கம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...