உமாபதியே
உலகம் உய்யவே
விடமுண்டவன் நீ
வானவர் வாழவே
திடம் பூண்டவன்.
ஆலகாலத்தை
தொண்டையுள்
நிறுத்தினாய்
தேவர்களுக்கு
அமுதம் தந்து
அருளினாய்.
தண்டை
சலங்கையுடன்
ஆடிடுவாய்
கங்கையை
தலை மேலே
இருத்திடுவாய்
இந்த மாலை
வேளையில்
மஹேஸ்வரா நீ
மா நிலம்
தழைக்கவே
நடனமிடுவாய்
பிரதோஷ
காலம் உனை
பூஜிக்கவே
பக்தர்களின்
குறையினை
தீர்த்திடுவாய்.
பார்வதி
நாயகா
பரமேஸ்வரா
இப் பாலனுக்கு
அனுக்கிரகம்
தரும் ஈஸ்வரா.
பிரதோஷ கால வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.03.2019
No comments:
Post a Comment