நமச்சிவாயமே
நாகாபரணம்
தரித்தாடும்
நடராஜனே
திருநீறு
பூசியாடும்
தியாகராஜனே
தில்லையிலே
கோயில் கொண்ட
சிற்றம்பலமே
எல்லையில்லா
வாயில் கொண்ட
ஏகாம்பரமே
வில்வத்தால்
அர்ச்சிப்போம்
உமாபதியே
வல்வினைகள்
வேரறுப்பாய்
சபாபதியே
சரணாகதி
உனையடைய
சர்வேஸ்வரா
சகல பாபமும்
தீர்த்தருள்வாய்
விஸ்வேஸ்வரா
நான்மறைகள்
போற்றுகின்ற
நமச்சிவாயமே
நால்வரும்
பாடித் துதித்த
பஞ்சாட்ஷரமே
ஆறு கால
பூஜையேற்கும்
ஆலகாலனே
ஊறுகளை
களைந்தெடுக்கும்
நீலகண்டனே
உருவமில்லாத
உனக்கு ஒரு
உருவம் ஏதய்யா
உன் பக்தர்க்கு
உருகி எடுத்த
உருவம் தானய்யா
அண்டத்தை
ஆட்டுவிக்கும்
ஆபத்பாந்தவா
ஆனந்த
தாண்டவமும்
அனுக்கிரஹித்தவா
பஞ்ச சபைதனில்
ஆடிக் காட்சியும்
தருவாய்
தஞ்சமடைந்தால்
தேடி சாட்சியும்
கொடுப்பாய்
பக்தர்களை
சோதித்து நீ
விளையாடுவாய்
பக்தியை மெச்சி
பின்னர் ஆட்
கொள்ளுவாய்
சிவராத்திரி
திருநாளில்
பூஜித்திடவே
மானுடப்
பிறப்புக்கும்
பயனாகுமே.
சித்ஸபேசா சிவ சிதம்பரம்.
திருச்சிற்றம்பலம் !!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.03.2019
No comments:
Post a Comment