Search This Blog

Sunday, March 3, 2019

நமச்சிவாயமே

நமச்சிவாயமே

நாகாபரணம்
தரித்தாடும்
நடராஜனே
திருநீறு
பூசியாடும்
தியாகராஜனே

தில்லையிலே
கோயில் கொண்ட
சிற்றம்பலமே
எல்லையில்லா
வாயில் கொண்ட
ஏகாம்பரமே

வில்வத்தால்
அர்ச்சிப்போம்
உமாபதியே
வல்வினைகள்
வேரறுப்பாய்
சபாபதியே

சரணாகதி
உனையடைய
சர்வேஸ்வரா
சகல பாபமும்
தீர்த்தருள்வாய்
விஸ்வேஸ்வரா

நான்மறைகள்
போற்றுகின்ற
நமச்சிவாயமே
நால்வரும்
பாடித் துதித்த
பஞ்சாட்ஷரமே

ஆறு கால
பூஜையேற்கும்
ஆலகாலனே
ஊறுகளை
களைந்தெடுக்கும்
நீலகண்டனே

உருவமில்லாத
உனக்கு ஒரு
உருவம் ஏதய்யா
உன் பக்தர்க்கு
உருகி எடுத்த
உருவம் தானய்யா

அண்டத்தை
ஆட்டுவிக்கும்
ஆபத்பாந்தவா
ஆனந்த
தாண்டவமும்
அனுக்கிரஹித்தவா

பஞ்ச சபைதனில்
ஆடிக் காட்சியும்
தருவாய்
தஞ்சமடைந்தால்
தேடி சாட்சியும்
கொடுப்பாய் 

பக்தர்களை
சோதித்து நீ
விளையாடுவாய்
பக்தியை மெச்சி
பின்னர் ஆட்
கொள்ளுவாய்

சிவராத்திரி
திருநாளில்
பூஜித்திடவே
மானுடப்
பிறப்புக்கும்
பயனாகுமே.

சித்ஸபேசா சிவ சிதம்பரம்.

திருச்சிற்றம்பலம் !!!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...