நடராஜா
மங்கை சிவகாமி
உனது இட பாகம்
கங்கை சிவனாரின்
தலை பாகம்
கணபதி முருகன்
இரு பிள்ளையாம்
தர்ம சாஸ்தா உனது
அருட் பிள்ளையாம்
திருவிளையாடல்
பல செய்தவனாம்
தில்லையிலே திரு
நடனம் புரிபவனாம்
பஞ்ச பூதங்களைப்
படைத்தவனாம்
தஞ்சமடைந்தோரை
காப்பவனாம்
தேவார திருவாசக
நாயகனாம் அவன்
தேவாதி தேவன்
நடராஜனாம்.
திருச்சிற்றம்பலம் !!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.03.2019
No comments:
Post a Comment