Search This Blog

Monday, March 4, 2019

நடராஜா

நடராஜா

மங்கை சிவகாமி
உனது இட பாகம்
கங்கை சிவனாரின்
தலை பாகம்

கணபதி முருகன்
இரு பிள்ளையாம்
தர்ம சாஸ்தா உனது
அருட் பிள்ளையாம்

திருவிளையாடல்
பல செய்தவனாம்
தில்லையிலே திரு
நடனம் புரிபவனாம்

பஞ்ச பூதங்களைப்
படைத்தவனாம்
தஞ்சமடைந்தோரை
காப்பவனாம்

தேவார திருவாசக
நாயகனாம் அவன்
தேவாதி தேவன்
நடராஜனாம்.

திருச்சிற்றம்பலம் !!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
04.03.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...