அமாவாசை
பட்ட கடன்
தீர்க்கும்
நன்னாளாம்
அமாவாசை
என்னும்
திருநாளாம்
மாதத்தில்
ஒரு முறை
அமைந்திடுமே
முழு நிலவும்
முழுதாய்
மறைந்திடுமே
அவரவர்
குலப்படி
ஆச்சாரம்
கடைபிடிக்க
வாழ்வின்
அச்சாரம்
எள்ளும்
தண்ணீரும்
இறைத்திடவே
என்றும்
ஆனந்தம்
கிட்டிடுமே
காகத்திற்கு
அன்னமும்
இட வேண்டும்
போகத்தை
அன்று நாம்
விட வேண்டும்
தகப்பனார்
இருந்தால்
பூஜியுங்கள்
இல்லையெனில்
தர்ப்பணம் தந்து
சேவியுங்கள்.
மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.03.2019
No comments:
Post a Comment