Search This Blog

Wednesday, April 17, 2019

ஓட்டு போடுவோம்

ஓட்டு போடுவோம்

நல்லதொரு வாய்ப்பை
நழுவ விட வேண்டாம்
வாக்களிக்கும் உரிமை
விட்டுத் தர வேண்டாம்
நாடு நலம் பெற வேண்டும்
நற்தலைமை அமைய வேண்டும்
அந்நிய தேசத்திலும் கூட நமது
அன்னை பாரதம் மிளிர வேண்டும்

சற்றே சிந்திப்போம்
சுயமாக முடிவெடுப்போம்
சாதிக்கு ஓட்டுப் போடாமல்
சாதிக்கும் கட்சிக்கு ஓட்டிடுவோம்
மொழியாலே மதத்தாலே நம்மை
பிரித்தாள்வதை புறந்தள்ளி
தேசிய சிந்தனையில் திமிரோடு
துணை நிற்போம்

வந்தே மாதரம் என்று
வானுயர கூவுவோம
வாழ்க தமிழ் என்று
விண்ணதிர முழங்குவோம்

ஜெய் ஹிந்த் !!!!!!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.04.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...