ஓட்டு போடுவோம்
நல்லதொரு வாய்ப்பை
நழுவ விட வேண்டாம்
வாக்களிக்கும் உரிமை
விட்டுத் தர வேண்டாம்
நாடு நலம் பெற வேண்டும்
நற்தலைமை அமைய வேண்டும்
அந்நிய தேசத்திலும் கூட நமது
அன்னை பாரதம் மிளிர வேண்டும்
சற்றே சிந்திப்போம்
சுயமாக முடிவெடுப்போம்
சாதிக்கு ஓட்டுப் போடாமல்
சாதிக்கும் கட்சிக்கு ஓட்டிடுவோம்
மொழியாலே மதத்தாலே நம்மை
பிரித்தாள்வதை புறந்தள்ளி
தேசிய சிந்தனையில் திமிரோடு
துணை நிற்போம்
வந்தே மாதரம் என்று
வானுயர கூவுவோம
வாழ்க தமிழ் என்று
விண்ணதிர முழங்குவோம்
ஜெய் ஹிந்த் !!!!!!!
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.04.2019
No comments:
Post a Comment