மாமாஜி
எழுபதாண்டை கடக்கும்
ஏகாம்பரரின் புத்திரரே
என்றும் பதினாறாக
தமக்கு ஈசனருள் உண்டு.
பீமரத சாந்தி காணும்
பத்மாவதியார் மைந்தரே
பாசத்திற்கு சான்றாக
உடன் பிறந்தோர் உண்டு.
கோடா குடும்பத்தின்
சீமந்த புத்திரரே உமக்கு
சியாமளா அம்மையாரின்
துணை என்றும் உண்டு.
எத்துணை இடர் வரினும்
சிந்தனை கலங்காதவரே
சித்தத்தை இறையின்பால்
இருத்திய மனம் உண்டு.
தாய்மாமன் தாமென்று
தெம்போடு கூறுவோம்
தமது ஆசியும் வேண்டி
தம் அடியைப் பணிவோம்
நலமோடும் வளமோடும்
நூற்றாண்டுகள் கண்டு
எங்களை ஆசிர்வதித்து
அருள வேண்டுகிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன் பாலு..
19.04.2019
No comments:
Post a Comment