அன்னையர் தினம்
ராப் பகலா
கண் முழிச்சு
ஆத்தா வளர்த்தா
ருசிக்க ருசிக்க
சமைச்சு போட்டு
ரசிச்சு வளர்த்தா
கல்யாணத்த
ப்ண்ணிக்கிட்டு
கழட்டி விடாதே
கோவில் குளம்
சுத்தினாலும்
பாவம் விடாதே
பத்து மாசம்
சுமந்தவளை
பந்தாடாதே
பாத்து பாத்து
வளர்த்தவளை
புறந்தள்ளாதே
அப்பா கிட்ட
எப்பவும் அவ
தூது போவாளே
அவரடிச்சாலும்
முதலடியை தன்
முதுகில் ஏற்பாளே
முந்தானையில்
முடிச்சுகிட்டு நமை
தூங்க வெச்சாளே
முழு தூக்கத்தை
எப்பவும் அவள்
மறந்து போனாளே
அம்மா போல
உறவில் சொல்ல
யாரும் இல்லையே
அவளை மறந்தா
துறவில் கூட
மதிப்பும் இல்லையே.
அன்னையர் தினத்தில்
அவரடி பணிந்து எழுதியது.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.05.2019
No comments:
Post a Comment