Search This Blog

Saturday, May 11, 2019

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

ராப் பகலா
கண் முழிச்சு
ஆத்தா வளர்த்தா

ருசிக்க ருசிக்க
சமைச்சு போட்டு
ரசிச்சு வளர்த்தா

கல்யாணத்த
ப்ண்ணிக்கிட்டு
கழட்டி விடாதே

கோவில் குளம்
சுத்தினாலும்
பாவம் விடாதே

பத்து மாசம்
சுமந்தவளை
பந்தாடாதே

பாத்து பாத்து
வளர்த்தவளை
புறந்தள்ளாதே

அப்பா கிட்ட
எப்பவும் அவ
தூது போவாளே

அவரடிச்சாலும்
முதலடியை தன்
முதுகில் ஏற்பாளே

முந்தானையில்
முடிச்சுகிட்டு நமை
தூங்க வெச்சாளே

முழு தூக்கத்தை
எப்பவும் அவள்
மறந்து போனாளே

அம்மா போல
உறவில் சொல்ல
யாரும் இல்லையே

அவளை மறந்தா
துறவில் கூட
மதிப்பும் இல்லையே.

அன்னையர் தினத்தில்
அவரடி பணிந்து எழுதியது.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...