தாயே வணக்கம்
ஆய் எடுத்த
தாயை நீயும்
அழ வைக்காதே
காய் கனிகளை
ஊட்டி விட்டவளை
கண் கலக்காதே
பெரிசானாலும்
அவளுக்கு நாம
சின்னஞ்சிறுசு தான்
பெத்தவளுக்கு
எப்பவும் ரொம்ப
பாசம் அதிகம் தான்
பத்து புள்ளைங்க
பெத்தாக் கூட அவ
புலம்பிட மாட்டா
பாத்து பாத்து
வளர்க்கவும் அவ
மறந்திட மாட்டா
தாயைப் போல
அனுசரனையா
தாரம் வேணுமே
வாழ்க்கைக்கு
அதுவே பெரும்
அச்சாரம் ஆகுமே.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.05.2019
No comments:
Post a Comment