அன்றும் இன்றும்
நேரில் பார்ப்பதை விட
நெட்டில் பார்ப்பதிலே
சுவாரஸ்யம் அதிகம்.
எல்லைகளைக் கடந்து
எங்கோ ஒரு மூலையில்
காத்து கிடப்போம்.
ஆசை கொண்டவரை
ஆன்லைனில் பார்த்தே
ஆனந்தமடைவோம்.
மென்பொருளில் பேசுவோம்
மெஸேஜ் போட்டு பேசுவோம்
மெளன மொழியில் பேசுவோம்.
இரவுப் பொழுதில் இமை மூடி
இசையோடு கழிந்த காலங்கள்
இப்போதோ இன்டர்நெட்டோடு.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05-05-2019
No comments:
Post a Comment