நடிகனே !!
யாரிடம்
காசு வாங்கி
கூவுகின்றாய் ?
எழுபதாண்டுகளைக்
கடந்த ஓர் கொலைக்கு
மதச்சாயம் பூசுகின்றாய்.
நேற்றும் முன் தினமும்
நடந்த தீவிரவாதத்துக்கு
ஏனோ மெளனிக்கிறாய்.
இந்து மதத் துவேஷத்தை
திரைப்படத்தில் காட்டிய நீ
தெருவிலும் துவக்கியுள்ளாய்.
சேற்றில் எறிந்த கல்
சேதாரம் இல்லாமல்
உன்னிடமே சேருமய்யா.
சேர்த்த புகழ் யாவும்
க்ஷண நேரத்திற்குள்
உம்மை விலகு மய்யா.
விருமாண்டியே !!!
உமது விளையாட்டை
வெள்ளித் திரையோடு
நிறுத்திக் கொள்ளும்.
வீதிக்கு கொண்டு வந்து
அசிங்கப் பட வேண்டாம்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.05.2019
No comments:
Post a Comment