Search This Blog

Friday, May 17, 2019

நவீன காதல்

நவீன காதல்

உயிருள்ள ஓவியமாய்
உள் மனதில் நீ இருக்க
நேரில் ஏனோ பார்க்கத்
தோணவில்லை.

உன்னுள்ளே நானிருக்க
என்னுள்ளே நீ யிருக்க
நமக்கு இடையே என்றும்
தொலைவில்லை.

கவர்ச்சியாலான காதலும்
காதலைக் கடந்த காமமும்
காமத்தாலான குரோதமும்
கண்டிப்பா யிங்கில்லை.

காற்றொலியிலும்  கூட
குரலையே கேட்கிறேன்
கண் மூடிக் கிடக்கையிலும்
கனவில் நான் பார்க்கிறேன்.

அம்மாவைப் பிடிக்கும்
ஆண்டவனைப் பிடிக்கும்
அது போல தான் எனக்கு
எப்பவுமே உனைப் பிடிக்கும்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

என்றும் அன்புடன்.......

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...