நவீன காதல்
உயிருள்ள ஓவியமாய்
உள் மனதில் நீ இருக்க
நேரில் ஏனோ பார்க்கத்
தோணவில்லை.
உன்னுள்ளே நானிருக்க
என்னுள்ளே நீ யிருக்க
நமக்கு இடையே என்றும்
தொலைவில்லை.
கவர்ச்சியாலான காதலும்
காதலைக் கடந்த காமமும்
காமத்தாலான குரோதமும்
கண்டிப்பா யிங்கில்லை.
காற்றொலியிலும் கூட
குரலையே கேட்கிறேன்
கண் மூடிக் கிடக்கையிலும்
கனவில் நான் பார்க்கிறேன்.
அம்மாவைப் பிடிக்கும்
ஆண்டவனைப் பிடிக்கும்
அது போல தான் எனக்கு
எப்பவுமே உனைப் பிடிக்கும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
என்றும் அன்புடன்.......
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.05.2019
No comments:
Post a Comment