வார இறுதி சிறப்பு கவிதை
விடுமுறை விட்டபின்
ஊருக்குச் செல்லும்
சின்னப் பையனாய்
எனை உணர்கிறேன்.
விருவிருவென்று
வாரத்தின் நாட்கள்
திங்களில் தொடங்கி
வெள்ளியில் முடிந்தது.
வேலை செய்யவும் இஷ்டம்
வீட்டில் இருக்கவும் இஷ்டம்
தொடர்ச்சியாய் இருந்தால்
இரண்டிடத்திலும் கஷ்டம்.
தொய்வில்லாது பணி புரிய
ஓய்வு கண்டிப்பாய் வேணும்
மலர்ச்சியுடன் இருக்க சற்று
சாய்வு அவசியம் வேணும்.
மனதளவில் குழந்தையாக
உடலளவில் இளங்குமரனாக
மதிநுட்பத்தில் அறிஞனாக
உயர்வாக இருக்க வேணும்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.05.2019
No comments:
Post a Comment