Search This Blog

Friday, May 17, 2019

வார இறுதி சிறப்பு கவிதை

வார இறுதி சிறப்பு கவிதை

விடுமுறை விட்டபின்
ஊருக்குச் செல்லும்
சின்னப் பையனாய்
எனை உணர்கிறேன்.

விருவிருவென்று
வாரத்தின் நாட்கள்
திங்களில் தொடங்கி
வெள்ளியில் முடிந்தது.

வேலை செய்யவும் இஷ்டம்
வீட்டில் இருக்கவும் இஷ்டம்
தொடர்ச்சியாய் இருந்தால்
இரண்டிடத்திலும் கஷ்டம்.

தொய்வில்லாது பணி புரிய
ஓய்வு கண்டிப்பாய் வேணும்
மலர்ச்சியுடன் இருக்க சற்று
சாய்வு அவசியம் வேணும்.

மனதளவில் குழந்தையாக
உடலளவில் இளங்குமரனாக
மதிநுட்பத்தில்  அறிஞனாக
உயர்வாக இருக்க வேணும்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...