அனுஷ பெரியவா
துறவுக் கிலக்கணமாய்
தரணியில் அவதரித்த
அத்வைத ஆதி சங்கரா
நூறாண்டுகள் வாழ்ந்து
நியம நிஷ்டைகள் காத்த
அத்வைத ஆதி சங்கரா
ஜாதி மத பேதம் இன்றி
சகலரையும் ரக்ஷித்த
அத்வைத ஆதி சங்கரா
சந்நியாச தர்மத்தை
சத்தியமாய் அனுஷ்டித்த
அத்வைத ஆதி சங்கரா
வேதமும் தழைத்தோங்க
வேள்விக்கும் வழி செய்த
அத்வைத ஆதி சங்கரா
வந்து சேர்ந்த பக்தர்களின்
வாட்டத்தை துடைத்த குரு
அத்வைத ஆதி சங்கரா
காற்றை மட்டும் சுவாசித்து
கடுமையாக விரதமிருந்த
அத்வைத ஆதி சங்கரா
காலமெலாம் காலடியால்
பாரதத்தை வலம் வந்த
அத்வைத ஆதி சங்கரா
சிவ விஷ்ணு ரூபம் நீ
காமாஷியின் அம்சம் நீ
அத்வைத ஆதி சங்கரா
சிந்தையில் உனையிருத்தி
செய்யும் செயல் ஜெயமே
அத்வைத ஆதி சங்கரா
அனுஷ நன்னாளில்
மஹா பெரியவா சரணம் 🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.05.2019
No comments:
Post a Comment