Search This Blog

Sunday, May 19, 2019

அனுஷ பெரியவா

அனுஷ பெரியவா

துறவுக் கிலக்கணமாய்
தரணியில் அவதரித்த
அத்வைத ஆதி சங்கரா

நூறாண்டுகள் வாழ்ந்து
நியம நிஷ்டைகள் காத்த
அத்வைத ஆதி சங்கரா

ஜாதி மத பேதம் இன்றி
சகலரையும் ரக்ஷித்த
அத்வைத ஆதி சங்கரா

சந்நியாச தர்மத்தை
சத்தியமாய் அனுஷ்டித்த
அத்வைத ஆதி சங்கரா

வேதமும் தழைத்தோங்க
வேள்விக்கும் வழி செய்த
அத்வைத ஆதி சங்கரா

வந்து சேர்ந்த பக்தர்களின்
வாட்டத்தை துடைத்த குரு
அத்வைத ஆதி சங்கரா

காற்றை மட்டும் சுவாசித்து
கடுமையாக விரதமிருந்த
அத்வைத ஆதி சங்கரா

காலமெலாம் காலடியால்
பாரதத்தை வலம் வந்த
அத்வைத ஆதி சங்கரா

சிவ விஷ்ணு ரூபம் நீ
காமாஷியின் அம்சம் நீ
அத்வைத ஆதி சங்கரா

சிந்தையில் உனையிருத்தி
செய்யும் செயல் ஜெயமே
அத்வைத ஆதி சங்கரா

அனுஷ நன்னாளில்
மஹா பெரியவா சரணம் 🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...