நடிகனே !!
கைது செய்தால்
கலவரம் வெடிக்கும் !!!
எழுதித் தந்ததை
படித்து நடித்தவனே
இன்னும் யார் உன்னை
மறைவில் இயக்குகிறார் ?
கூத்தாடிக்கு சேரும்
கூட்டம் ஒரு நாளும்
கோட்டைக்கு அவனை
கூட்டிச் செல்லாது.
மீசையை முறுக்கியும்
மொத்தமாய் வழித்தும்
முக பாவம் மாற்றுவாய்
அகம்பாவமும் காட்டுவாய்.
புரியாத மாதிரி பேசியே
மக்களை குழப்புகின்ற நீ
முன்னுக்கு பின் கூறியே
மீடியாக்களிடம் மழுப்புவாய்.
நல்ல வேளை நீ இப்போது
அரசியலில் இறங்கியதால்
உன்னுடைய அசல் முகம்
அம்பலமாயிற்று.
சொந்த வாழ்க்கையில்
சேற்றைக் கண்டவன்
பொது வாழ்க்கையில்
சோற்றையா காண்பான் ?
இன்னுமோர் காமராஜருக்கு
எத்தனை காலம் தான் நமது
தமிழகம் காத்துக் கிடக்கும் ?
வருத்தத்துடன் எழுதியது...
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.05.2019
No comments:
Post a Comment