Search This Blog

Thursday, May 2, 2019

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

காபியா
டீயா என
யோசித்து
முடிப்பதற்குள்
நேரம் கடந்து
விடுகின்றது.

இரண்டுமே
சுடுநீரின்
வேறுபாடு
இருந்தும்
தயாரிப்பில்
முரண்பாடு

தண்ணீராய்
டிகாஷனைக்
காணும் போது
வெந்நீரையே
குடிக்க மனதில்
தோணும்

ஏலத்தை
சேர்ப்பதா
இஞ்சியை
போடுவதா
முடிவுக்கு வர
முடிவதில்லை

அவளிருந்த போது
ஐயம் வந்ததில்லை
அசதியாய் வரும் நேரம்
அவளை மறப்பதற்கில்லை.

கோடை விடுமுறையே
நீ முடிவது எப்போது ?

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
02.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...