நடராஜா
ஒரு முறை சிதம்பரம்
வாருங்கள் எங்கள்
சபாபதியை தரிசித்து
பாருங்கள்.
உயர்த்திய கையால்
உமை இழுப்பான் நம்
உயிருள்ள வரைக்கும்
வழி கொடுப்பான்.
தூக்கிய திருவடியை
தரிசிக்கவே தினமும்
தேடியே வருவோர்
தில்லையிலே.
ராஜாதி ராஜனவன்
நடராஜனாம் அருகே
கோவிந்தராஜனுடன்
இருப்பவனாம்.
நான்மாட வீதிகளை
வலம் வருவோம் நம்
நாயன்மார் துதித்தவனை
வழிபடுவோம்.
ஆண்டிற்கு இரு முறை
வலம் வருவான் நம்மை
ஆட்க்கொண்டு அருளி
நலம் தருவான்.
சம்போ மஹாதேவா என
கூறிடுவோம் சிதம்பரம்
சித்ஸபேஸன் திருவடியைப்
பற்றிடுவோம்.
நடராஜா நடராஜா நடராஜா !!
திருச்சிற்றம்பலம்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.05.2019
No comments:
Post a Comment