Search This Blog

Sunday, May 5, 2019

நடராஜா

நடராஜா

ஒரு முறை சிதம்பரம்
வாருங்கள் எங்கள்
சபாபதியை தரிசித்து
பாருங்கள்.

உயர்த்திய கையால்
உமை இழுப்பான் நம்
உயிருள்ள வரைக்கும்
வழி கொடுப்பான்.

தூக்கிய திருவடியை
தரிசிக்கவே தினமும்
தேடியே  வருவோர்
தில்லையிலே.

ராஜாதி ராஜனவன்
நடராஜனாம் அருகே
கோவிந்தராஜனுடன்
இருப்பவனாம்.

நான்மாட வீதிகளை
வலம் வருவோம் நம்
நாயன்மார் துதித்தவனை
வழிபடுவோம்.

ஆண்டிற்கு இரு முறை
வலம் வருவான் நம்மை
ஆட்க்கொண்டு அருளி
நலம் தருவான்.

சம்போ மஹாதேவா என
கூறிடுவோம் சிதம்பரம்
சித்ஸபேஸன் திருவடியைப்
பற்றிடுவோம்.

நடராஜா நடராஜா நடராஜா !!

திருச்சிற்றம்பலம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...