Search This Blog

Sunday, May 5, 2019

விரகமும் விரதமும்

விரகமும் விரதமும்

உறவாமல்
இருந்தால்
விரகமாகும்

உண்ணாமல்
இருந்தால்
விரதமாகும்

சிற்றின்ப
சிந்தனை
விரகமாகும்

பேரின்ப
சிந்தனை
விரதமாகும்

பிரிந்து
இருப்பது
விரகமாகும்

புரிந்து
இருப்பது
விரதமாகும்

ஆடவரை
நினைப்பது
விரகமாகும்

ஆண்டவனை
நினைப்பது
விரதமாகும்

கட்டிலை
நினைப்பது
விரகமாகும்

கடவுளை
நினைப்பது
விரதமாகும்

விரகமிருந்தால்
விரதமெதற்கு
விரதமிருந்தால்
விரகமெதற்கு ?

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
05.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...