கண்ணே !!
விழியோரத்தே
வழியும் நீரினை
வியர்வையென்று
பொய்யுரைப்பேன்.
உவர்ப்பு நீரை
துடைத்து விட்டு
உலகோர் மத்தியில்
உலவிடுவேன்.
வீணாய்ப் போன
காதலைப் புரிந்து
விட்டத்தை வெறித்து
நான் பார்க்கின்றேன்.
வருத்தம் சுமந்து
விரகத்தில் மடியும்
வேதனையைத் தான்
எவர்க்குச் சொல்வேன்.
வெற்றுப் பக்கத்தில்
விடை இருக்காது
உற்று பார்க்கையில்
வழி கிடைக்காது.
கல்யாணமென்பது
கனவாய் ஆனது
காதல் கொண்டதே
கடைசியாய் நின்றது.
ஆசை கொண்டது
அற்பமாய் முடிந்தது
அனுதினமுமெனக்கு
அவஸ்தையானது.
அனைத்தையும் நீ
மறைத்துப் போட்டு
அந்நியனொருவன்
கரம் பிடித்தாய்.
அம்பிகாபதியாய்
காதலைச் சுமந்து
வாழும் நிலைக்கு
வரம் கொடுத்தாய்.
ஒவ்வொரு முறையும்
காணும் போதெலாம்
குறு குறுக்க பார்த்து
கொல்லுகிறாய்.
வெவ்வேறு தருணமும்
பேசிய பொழுதெலாம்
துரு துருவென சிரித்து
கொள்ளுகிறாய்.
சும்மா ஒருதலைக் காதல் கவிதை 😎
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19-05-2019
No comments:
Post a Comment