Search This Blog

Friday, February 25, 2022

புத்தாண்டு

 புத்தாண்டு 


ஆறிரு திங்கள் முடிந்து

அடுத்ததோர் ஆண்டும்

பிறக்குது. 


அவணியில் புதிதாய்

ஜனனமும் மரணமும்

நிகழுது. 


இயற்கை நியதியில்

பருவ நிலை மாற்றம்

நடக்குது. 


முயற்சி ஏதுமில்லாது

மாந்தர்தம் அகவையும்

ஏறுது. 


நதியின் மேல் விழுந்து

இலை நகர்வது போல

நம் வாழ்க்கை கழியுது. 


இடைப்பட்ட காலம்

உள்ளுக்குள் ஏனோ

இத்தனை சிக்கல் ? 


எதுவும் நம் கையில்

இல்லாதிருப்பினும்

எத்தனை பூசல்கள் ? 


பயம் பதட்டம் மனதில்

அழுத்தமென நித்தம்

உழல்வதேன் ? 


சித்தத்தை சிவனிடம்

சமர்ப்பித்து அன்றாடக்

கடமையும் செய்வோம். 


அவனின்றி ஓரணுவும்

அசையாது என்பதிலும்

திடமாக இருப்போம். 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

27.12.2021


No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...