Search This Blog

Friday, February 25, 2022

பயணம்

 பயணம் 


ஒரே இடத்தில்

இருந்தால் அது

குட்டை. 


ஓடிக்கொண்டே

இருந்தால் அது

ஓடை. 


குட்டையின்

தண்ணீர் என்றும்

குடிக்க முடியாது. 


ஓடையின் 

தண்ணீரையே

குடி(ளி)க்க இயலும். 


பயணப்படும்

வரையிலேயே நாம் 

சிவம் ஆகிறோம். 


பயணம் நின்று

போனாலோ நாம்

சவம் ஆகிறோம். 


தொடர் தேடல்

மட்டுமே இன்னும்

இவ்வுலகை ஜீவித்து

வைத்துள்ளது. 


கூடலும் ஊடலும்

தேடலும் ஓடலும்

கலந்த மாயையே

இவ்வுலகம். 


இதுவே ஆறறிவுக்கும்

அதன் கீழுள்ளறிவுக்கும்

இருக்கின்ற மாபெரும்

வேறுபாடு. 


🤗🤗🤗 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

28.12.21



No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...