பயணம்
ஒரே இடத்தில்
இருந்தால் அது
குட்டை.
ஓடிக்கொண்டே
இருந்தால் அது
ஓடை.
குட்டையின்
தண்ணீர் என்றும்
குடிக்க முடியாது.
ஓடையின்
தண்ணீரையே
குடி(ளி)க்க இயலும்.
பயணப்படும்
வரையிலேயே நாம்
சிவம் ஆகிறோம்.
பயணம் நின்று
போனாலோ நாம்
சவம் ஆகிறோம்.
தொடர் தேடல்
மட்டுமே இன்னும்
இவ்வுலகை ஜீவித்து
வைத்துள்ளது.
கூடலும் ஊடலும்
தேடலும் ஓடலும்
கலந்த மாயையே
இவ்வுலகம்.
இதுவே ஆறறிவுக்கும்
அதன் கீழுள்ளறிவுக்கும்
இருக்கின்ற மாபெரும்
வேறுபாடு.
🤗🤗🤗
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
28.12.21
No comments:
Post a Comment